நீதிமன்றங்கள் முன்பு போலில்லை. கலவரத்தில் ஈடுபட்டு பிடிபட்ட எந்த ஜிஹாதிக்கும் எந்த நீதிமன்றமும் ஜாமின் தரவில்லை இன்று. மேலும், “உங்கள் செயல் கண்டிக்கத்தக்க்து” என்ற ரீதியில் கடிந்து கொண்டன நீதிமன்றங்கள்.
“சேதாரங்களை கலவரக்காரர்களிடமிருந்து மீட்க” சொல்லி சில ஆண்டுகளுக்கு முன் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் யோகி அரசு, கலவரக்கார்களின் சொத்துக்களை விற்று மீட்க முடிவு செய்து, பல கலவரக்கார்களின் சொத்துக்களை முடக்கியுள்ளது.
ஆக…. முன்பு போல பெயிலும் கிடைக்காது. சொத்தும் பறிபோகும் அபாயம். இதை அனைத்து மாநிலங்களும் பின்பற்றினாலும், 500 ரூபாய்க்கு ‘போராளியாக’ மாறும் எவனும் தெருவில் இறங்கி கலவரம் செய்ய மாட்டான்.
குறிப்பாக, போராட்டத்தை வழி நடத்தும் தலைவனுக்கு நீதிமன்றத்தில் அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும்.
“பெயில் கிடைக்காது, சேதாரங்களுக்கு தலைவன் இழப்பீடு செய்ய வேண்டும்” ஆகிய இரண்டும் கண் முன்னே வந்து போனதால் தான் ஸ்டாலினின் போராட்டம் பிசுபிசுத்தது!
இதே போல் சி.ஏ.ஏவுக்கு எதிராக பேனர் பிடித்த சென்னை ஐஐடியில் படித்து வரும் ஜெர்மன் நாட்டுக்காரனை மரியாதையா நாட்டை விட்டு வெளியேறுகிறாயா இல்லை தேசத் துரோக வழக்குப் போட்டு வெளியேற்றவா என்று மத்திய அமைச்சகம் நோட்டிஸ் விட்டிருக்கிறது.
நீதிமன்றங்கள் முன்பு போலில்லை… வாழ்க நீதித்துறை, வாழ்க அரசு நிர்வாகம்!
- செல்வ ரங்கன்