- 1 முதல் 10 வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு.
- 12-ம் வகுப்புக்கு ஜூன் 20-ல் பள்ளிகள் திறப்பு.
- 11-ம் வகுப்புக்கு ஜூன் 27-ல் பள்ளிகள் திறப்பு.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 10ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் ஜூன் 13ம் தேதி திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
பிளஸ் 2 வகுப்புக்கு ஜூன் 20ம் தேதியும், பிளஸ் 1 வகுப்புக்கு ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கடந்த மே 13ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இவர்களுக்கு ஜூன் இரண்டாவது வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. இதில் பிளஸ் 2 தேர்வுகள் முடிவடைந்துள்ளன.
இந்நிலையில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
அதன்படி, 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 வகுப்புக்கு ஜூன் 20ம் தேதியும், பிளஸ் 1 வகுப்புக்கு ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும்.
2022-23 கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பையும் அமைச்சர் வெளியிட்டுள்ளார். அதன்படி 2023ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வும், மார்ச் 14ம் தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வும்,
ஏப்ரல் 3ம் தேதி 10ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடைபெறும்.