Home தமிழகம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

தமிழக அரசின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம்.

இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் கல்வி தகுதி அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Any Degree/ Graduate in Law/ PG Degree/ ICWA/ CA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கபட்டுள்ளது. மேலும், இந்தப் பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.26,000 முதல் அதிகபட்சம் ரூ.47,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பத்தாரர்கள் வயது வரம்பு அதிகபட்சம் 25 வயதிற்கு உட்ப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

இந்த Personal Assistant to Director & Assistant பணிகளுக்கு மொத்தம் மூன்று காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் நேர்காணல், தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

ஆர்வமுள்ளவர்கள் 30.09.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Detalis & Application Form: PR-070920211807Eng.pdf (tnerc.gov.in)

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version