மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC) சார்பில் தற்போது பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 21 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு பி.எச்டி தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலிப் பணியிடங்கள் : 21
கல்வித் தகுதி :
பேராசிரியர் – இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் Ph.D தேர்ச்சி பெற்றிருப்பதோடு, குறைந்தது 5 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இணை பேராசிரியர் – கணினி அறிவியல் துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, குறைநதது 8 ஆண்டுகள் கற்பித்தல், ஆராய்ச்சி அல்லது தொழிற்துறையில் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஆசிரியர் – அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் நர்சிங் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 முதல் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : இப்பணியிடங்களுக்கான ஊதியம் குறித்து அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக 16.12.2021 தேதிக்குள் https://www.upsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது, ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ.25
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி / பெண்கள்) விண்ணப்ப கட்டணம் இல்லை.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.upsc.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.