ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, விண்ணப்பங்களை தாக்கல் செய்பர்கள் அதிகம் பேர் முண்டியடித்ததில், இணையதளம் சரிவர இயங்கவில்லை.
இந்நிலையில், இணையதள சர்வர்கள் சரிவர இயங்காததால் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் பட்டதாரிகள் அவதிப் படுவதாக புகார் தெரிவித்தனர். எனவே, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.