34 மாணவிகள் இந்தக்கல்லூரி ஆசிரியர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகினோம் என்று நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. ஆனால், தமிழகத்தில் மயான அமைதி! என்னவாக இருக்கும்?
இப்படித்தான் கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஊடகங்களில். சென்னை கிறிஸ்துவக் கல்லூரியின் மாணவிகள் 34 பேர் தாங்கள் கல்லூரி ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப் பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறினர். ஆசிரியர் தாக்கல் செய்த மனு குறித்து பதிலளித்த உயர் நீதிமன்றம், கிறிஸ்துவக் கல்விக் கூடங்களில் படிப்பு சொல்லிக் கொடுக்கிறார்கள்; ஆனால் ஒழுக்கம் அறநெறி இவை போதிக்கப் படுகின்றனவா என்பது கேள்விக் குறி என்று குறிப்பிட்டார்.
கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் அறநெறியை போதிக்கின்றனவா என்றால்… மில்லியன் டாலர் கேள்விதான்!
இதைக் கேட்டு, பூனைக்குட்டி இப்போதுதான் வெளிவந்திருக்கிறது என்று கருத்து தெரிவித்தனர் சிலர். அதே நேரம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சென்னையில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி பற்றி அவரின் தனிப்பட்ட கருத்தை பேசி உள்ளார். இது வருத்தம் அளிக்கிறது. அவரது கருத்து நீதிபதிகள் தங்கள் எல்லைக்குள் பேச வேண்டும் என்ற நிலையை மாற்றியிருக்கிறது… என்று கூறினார் மதிமுக., பொதுச் செயலர் வைகோ.
இந்நிலையில், ஊடகங்கள் இந்த விவகாரத்தில் மௌனமாக இருப்பது, அதன் கள்ளத்தனத்தைக் காட்டுகிறது என்று சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா யாரோ சிலர் பெயரைச் சொல்லி போன் கால் தான் பேசினார். ஆனால் அதை பெரிய அளவுக்கு ஊதிப் பெரிதாக்கி, பக்கம் பக்கமாக எழுதி கல்லா கட்டின பத்திரிகைகள். ஆனால் ஒரு பேராசிரியர் தங்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும், சீண்டலுக்கு ஆளாக்கியதாகவும் 34 கல்லூரி மாணவிகள் புகார் அளித்தும், மயான அமைதியில் திளைத்து தமிழகம் அமைதிப் பூங்கா ஆகி இருப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது. இதன் பின்னணி சந்தேகத்துக்கு உரியதாக உள்ளது… என்று கூறுகின்றனர்.
இது குறித்து சமூக ஊடகமான டிவிட்டர் பதிவுகளில் கொட்டித் தீர்க்கும் சிலரது மனக்குமுறல்கள் இவை….
ஊரே பார்க்க ஒரு தாத்தா கன்னத்தில் தட்டியதையே அறுவெறுப்பு என்ற பத்தினிகளே!
இப்போ 34 மாணவிகள் கொடுத்த #பாலியல் புகாரை பற்றி ஏதாவது?
— Gopikrishnan (@VGopikrishnan4) August 18, 2019
பாதருக்கே பாவ மன்னிப்பு குடுத்தாச்சே ஆசிரியருக்கெல்லாம் குடுக்க மாட்டோமா
பெண்களாகிய நீங்கள் எல்லாம் பேசாதிருப்பது ஆச்சரியமா உள்ளது @khushsundar @KanimozhiDMK @lakhinathan @jothims @VanathiBJP
நமக்கென்ன என்று விட்டு விட்டீர்களா
— Sivaraman Hariharan (@SivaramanHarih1) August 18, 2019
அந்த போராசியர் பின்னால் எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர் இருப்பதாக தகவல் லாபத்தில் ஆளுக்கு பாதி இந்த நக்கீரன் என்ன பன்றான் இதை கொஞ்சம் எழுதுனா பரவாயில்லை இப்ப இந்த பொள்ளாச்சி போராட்ட போராளி எங்கே
— Senthil rajamanickam (@senthilrajaman9) August 18, 2019
ஆண் ஹித்துவாஇருந்தாதான் எங்களுக்கு கோவம் வரும்.
வேற எந்த மதமா இருந்தாலும் நாங்க கண்டுக்க மாட்டோம்…..
அதுவே #பெரியார்மண் ணின் பெருமைகள்….
— SHANKAR BARADHWAJ (@shankar6763) August 18, 2019
நக்கீரன் கோபால் ஏதாவது இது பற்றி எழுதி உள்ளாரா? திமுக அபிமானியான அவரிடம் இதை எதிர்பார்க்க முடியாது.minoritykal என்ன செஞ்சாலும் கண்டுக்க மாட்டாங்க.
— Woodpecker (@Woodpec45831732) August 18, 2019
லச்சுமிக்கு கன்னத்தில் தட்டியதுதான் குற்றம்!மற்றபடி,”ரேப்” எல்லாம் ஒப்புக்கொள்ளக்கூடிய செயல்!
— raneelu (@raneelu) August 18, 2019
உதட்டளவில் பெண்ணீய்ம் பேசும்
உத்தம தலைவர்களுக்கு, சமூக ஆர்வலர்களுகு ஒரு கேள்வி.
ஆணுக்கு ஒரு நீதி
பெண்ணுக்கு ஒரு நீதியா? pic.twitter.com/4RV3RfiLjv— Americai V Narayanan (@americai) August 19, 2019