இன்று நாடு முழுதும் விநாயக சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. இந்த விழாவினை அதிக அளவில் மக்கள் மத்தியில் பரப்பி, மக்கள் தெருக்களில் கொண்டாடும் எளிய விழாவாக அறிமுகப் படுத்தி, 80களில் தொடங்கி இன்று வரை உயிர்ப்புடன் வைத்திருக்கும் இந்து முன்னணி அமைப்பு தமிழை மையப் பொருளாக்கிக் கொண்டாடுகிறது.
தெய்வீகத் தமிழைக் காப்போம் போலித் தமிழினவாதத்தை முறியடிப்போம் – என்பதுதான் இந்த வருடம் இந்து முன்னணி மேற்கொண்டுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவின் ‘நோக்கம்’!
இந்த நிலையில், இன்று காலை, இந்து முன்னணி சார்பாக
விநாயக சதுர்த்தி சதுர்த்தி முன்னிட்டு அந்த அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன் சென்னையில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார்.
தமிழை வளர்த்தவர்களும்…. தமிழை வைத்து பிழைத்தவர்களும் ….. என்ற புத்தகத்தை இன்று காலை ராம.கோபாலன் வெளியிட, அந்த அமைப்பின் மாநில அமைப்பாளர் பக்தன் பெற்றுக் கொண்டார்.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்… புத்தகத்தைப் பெற… 044 28457676