2012 – 13ல் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டிருந்த போது, நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் அது குறித்து விளக்கம் அளித்தார். அப்போது,
வளர்ச்சி விகிதம் முதல் காலாண்டில் குறைவு என்றும் 5 % என்பது முயற்சி செய்யப் படும் என்றும் கூறினார். மேலும், அப்போது ஜிடிபி 4.4% இருந்ததை பெரிய வளர்ச்சி என்றும் குறிப்பிட்டார்.
இருந்தாலும் பெரும்பாலான மற்ற நாடுகள் மிகக் குறைந்த வளர்ச்சி விகிதமே எதிர்பார்க்கப் பட்டாலும், இந்தியாவில் நாம் அவர்களைக் காட்டிலும் நல்ல வளர்ச்சி வீதத்தை எதிர்பார்க்கிறோம்… என்றார்.
இதைத்தான் இப்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் சொல்லியிருக்கிறார்.
ஆனாலும் சிதம்பரம், 5% என்பதை கிண்டல் செய்தவாறு, தனக்கு நீதிமன்றம் செப்.5 வரை கொடுத்த சிபிஐ காவலை கிண்டல் செய்யும் விதமாக இவ்வாறு சொல்லிச் செல்கிறார்….