― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஉச்ச நீதிமன்றத்துக்கு தமிழர் ஒருவர் நீதிபதியாக நியமனம்

உச்ச நீதிமன்றத்துக்கு தமிழர் ஒருவர் நீதிபதியாக நியமனம்

- Advertisement -

உச்ச நீதிமன்றத்திற்கு கிருஷ்ண முராரி, ரவீந்திர பட், தமிழகத்தை சேர்ந்த வி.ராமசுப்பிரமணியன், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் நீதிபதிகளாக நியமிக்கப் பட்டுள்ளனர்.

புதன்கிழமை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ணா முராரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரவீந்திர பட், இமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வி ராமசுப்பிரமணியன் மற்றும் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிருஷிகேஷ் ராய் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

4 நீதிபதிகள் நியமனங்களை அடுத்து, உச்ச நீதிமன்றம் 34 நீதிபதிகள் கொண்டமுழு பலத்துக்கு வந்துள்ளது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) சட்டத்தின் மூலம் அனுமதிக்கப்பட்ட பலம் இந்திய தலைமை நீதிபதியைத் தவிர 30 முதல் 33 ஆக உயர்த்தப்பட்டது. நான்கு நீதிபதிகள் அடுத்த வாரத்திற்குள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் முன் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் 28 ஆம் தேதி உச்ச நீதிமன்ற கொலீஜியம் நான்கு நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைத்தது. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் அகில இந்திய பணி மூப்பு பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் நீதிபதி கிருஷ்ணா முராரி 2004 இல் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு 2018 ஜூன் மாதம் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்த்தப்பட்டார்.

அகில இந்திய சீனியாரிட்டி பட்டியலில் 12 வது இடத்தில் இருக்கும் நீதிபதி ரவீந்திர பட் 2004 ல் தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு 2018 மே மாதம் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்த்தப்பட்டார்.

அகில இந்திய சீனியாரிட்டி பட்டியலில் 42 வது இடத்தில் இருக்கும் நீதிபதி ராமசுப்பிரமணியன் 2006ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு ஜூன் மாதம் இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்த்தப்பட்டார். முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஆர் பானுமதி, மூத்தவர்கள் பட்டியலில் கவனிக்கப்படவில்லை என்ற அடிப்படையில் ராமசுப்பிரமணியனின் பதவி உயர்வுக்கு ஆட்சேபனை தெரிவித்தார்.

அகில இந்திய சீனியாரிட்டி பட்டியலில் 46 வது இடத்தில் இருக்கும் ஜஸ்டிஸ் ராய், 2006 இல் கௌஹாத்தி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, ஆகஸ்ட் 2018 இல் கேரள உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்த்தப்பட்டார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், வரும் நவம்பரில் ஓய்வு பெறுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version