இந்தியாவின் உயர்ந்த விருதாக ‘பாரத ரத்னா’ விருது தற்போது கருதப்பட்டு வருகிறது. வாழ்நாள் சாதனை செய்த ஜாம்பவான்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.”சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒற்றுமை விருது” என்ற புதிய விருதை மத்திய அரசு தற்போது அறிமுகம் செய்துள்ளது.
நாட்டின் ஒற்றுமைக்காகவும் ஒருங்கிணைப்புக்காகவும் சிறந்த பங்களிப்பை அளிக்கும் நபர்களுக்கு இந்த விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விருது நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு இணையானதாக கருதப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது