புவனேஸ்வரம், ஆக.18: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரதிய காரியகாரி மண்டல் (ABKM) கூட்டத்தின் கடைசி நாளில் செய்தியாளர் கூட்டத்தில் அந்த அமைப்பின் செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்தவை…
ஏற்கெனவே பேரழிவு நிவாரணத்திற்காக RSS பணிபுரிந்து வந்த போதிலும், 1989 முதல், சங்கத்தின் திட்டமிட்டபடி சேவை திட்டங்களைத் தொடங்கியது. ஸ்வயம்சேவகர்கள் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
20 பெரிய தொண்டு மருத்துவமனைகள் மற்றும் 15 இரத்த தான வங்கிகள் ஸ்வயம்சேவகர்களால் நடத்தப்பட்டு வருகின்றன.
ஸ்வயம்சேவகர்களின் முயற்சியால், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 3 முதல் 4 ஆயிரம் கண் தானம் நடக்கிறது.
ஸ்வயம்சேவகர்கள் கிராம அபிவிருத்தித் துறையிலும் பணியாற்றி வருகின்றனர். உள்ளூர்வாசிகளின் முயற்சிகள் மற்றும் ஆதரவுடன், 250 கிராமங்கள் முன்மாதிரியாக உருவாக்கப்பட்டுள்ளன.
சங்கத்தின் எண்ணங்களை புரிந்து கொண்டு அதை ஏற்றுக்கொண்டு ஆர்.எஸ்.எஸ்ஸை ஆதரிக்கும் லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
16-17 வயதுடைய சுமார் 5 லட்சம் ஸ்வயம்சேவகர்கள் தினசரி ஷாகாவில் கலந்து கொள்கிறார்கள். 17 வயதுக்கு குறைவான 4 லட்சம் ஸ்வயம்சேவகர்களும் தினசரி ஷாக்காவில் கலந்து கொள்கிறார்கள்.
59,000 கிராமப்புற மண்டலங்களில், 30,000 மண்டலங்களில் ஆர்.எஸ்.எஸ்.,ஸின் பணி நடைபெறுகிறது.
தேசிய குடிமக்கள் பதிவேடு – என்.ஆர்.சி., நாடு முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டும். ஊடுருவியவர்களை அடையாளம் கண்டு, ஒரு கொள்கை வகுத்த பின்னர் முறையான நடவடிக்கை எடுப்பது எந்தவொரு அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதுவரை இந்த சோதனை அசாமில் மேற்கொள்ளப்பட்டது. இப்போது இது நாடு முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டும்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் வழியில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்க வேண்டும் என்பதே எங்கள் கருத்து. இப்போது நீதிமன்றத்தில் விசாரணை நிறைவடைந்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்துக்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
அயோத்தியில் ராம் கோயில் விஷயத்தை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன . இது நடந்திருந்தால், உலகம் முழுவதும் பாரதத்தின் நற்பெயர் மேலும் அதிகரித்திருக்கும். இந்த முயற்சிகளை நாங்கள் வரவேற்றோம். ஆனால் இது நடக்கவில்லை.
இந்த விஷயம் நீதிமன்றங்களில் மிக நீண்ட காலம் நீடித்தது. இப்போது நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் முடிந்துவிட்டன. நாம் அனைவரும் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும்.
ஒரே குடிமைச் சட்டம் அமல்படுத்தப்படுவது என்பது பழைய கோரிக்கையாகும். இது அரசியலமைப்பை உருவாக்கும் பொழுதே செய்திருக்க வேண்டும். இது அனைவருக்கும் பயனளிக்கும் மற்றும் எந்த நாட்டிலும், அதன் குடிமக்கள் அனைவருக்கும் ஒரே சட்டம் இருக்க வேண்டும்.
பாதுகாப்பு கருதி காஷ்மீர் பண்டிதர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நேர்ந்தது. காஷ்மீரில் ஒரு பாதுகாப்பான சூழல் நிகழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதனால் காஷ்மீர் இந்துக்கள் தங்கள் வீடுகளுக்கு மீண்டும் திரும்பிச் செல்ல முடியும்… என்றார் அவர்.