spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாமத்திய ஒருங்கிணைந்த பட்ஜெட் தாக்கல்: முக்கிய அம்சங்கள்!

மத்திய ஒருங்கிணைந்த பட்ஜெட் தாக்கல்: முக்கிய அம்சங்கள்!

- Advertisement -

புது தில்லி:
மத்திய ஒருங்கிணைந்த பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று காலை தாக்கல் செய்தார். பொது மற்றும் ரயில்வே பட்ஜெட்டை ஒன்றாக இணைத்ததன் காரணம் குறித்து அருண் ஜெட்லி தனது பட்ஜெட் உரையில் விளக்கினார். ரயில்வே மற்றும் சாலைப் போக்குவரத்தை சீரமைப்பதற்காகவே ஒரே பட்ஜெட் கொண்டு வரப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

2017- 2018 பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, மக்களவையில் புதன்கிழமை இன்று காலை 11.08 மணியளவில் தாக்கல் செய்தார். முதன்முறையாக பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்டுள்ளது.

ரயில்வே பட்ஜெட்டில் சில அம்சங்கள்:
7 ஆயிரம் ரயில் நிலையங்களில் சூரிய மின்வசதி
*3,500 கி.மீ., தூரத்துக்கு புதிய ரயில் பாதை
*ரூ.1 லட்சம் கோடியில் ரயில் பாதுகாப்பு நிதி உருவாக்கம்
*வழிபாட்டுதலங்கள், சுற்றுலா தலங்களுக்கு தனி ரயில்கள்
*9 மாநிலங்களுடன் இணைந்து 70 புதிய ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்படும்
*3,500 கி.மீ., தூரத்துக்கு புதிய ரயில் பாதை
*வேலைவாய்ப்பை உருவாக்க புதிய மெட்ரோ கொள்கை
*500 ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு லிப்ட், எஸ்கலேட்டர் வசதி.
*ஆன்லைன் ரயில் டிக்கெட் பதிவுக்கு சேவை வரி இல்லை
* 2019க்குள் அனைத்து ரயில் பெட்டிகளிலும் பயோ கழிப்பறைகள்
2018 க்குள் 3500 கி.மீ., ரயில் பாதை
ரயில் பயணிகள் பாதுகாப்பிற்காக ரூ.1 லட்சம் கோடி நிதி
அனைத்து ரயில் பெட்டிகளிலும் புகார் அளிக்கும் வசதி
2019 ம் ஆண்டிற்குள் அனைத்து ரயில்களிலும் பயோ டாய்லெட் வசதி
ரயில்வே துறைக்கு ரூ.55,000 கோடி ஒதுக்கீடு
தனியார் பங்களிப்புடன் மெட்ரோ ரயில் திட்டங்கள் நிறைவேற்றப்படும்

ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு சேவைக் கட்டணம் ரத்து
நாடு முழுவதும் 500 ரயில் நிலையங்கள் மாற்றுத்திறனாளிகளும் எளிதில் பயன்படுத்தும் அளவுக்கு வடிவமைக்கப்படும்.
2017 – 18 நிதியாண்டில் ரயில்வே துறைக்கு ரூ.1,31,000 கோடி ஒதுக்கீடு; இதில் ரூ. 51,000 கோடி அரசு பங்களிப்பாக இருக்கும்.
இந்த நிதியாண்டில் 3,500 கி.மீ. தூரத்துக்கு ரயில்வே இருப்புப் பாதை அமைக்கப்படும்.
கடந்த ஆண்டு 2,800 கி.மீ. ரயில் இருப்புப் பாதை அமைக்கப்பட்டது.
ரயில்வே வாரியத்தின் செலவினங்கள், ரயில்வே சேவை மீதான சமூக எதிர்பார்ப்புகள், சேவை தரம், ரயில்வே துறை எதிர்கொள்ளும் போட்டி ஆகியனவற்றின் அடிப்படையில் ரயில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும்.

மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் சில:

கறுப்புப் பணத்தை ஒழிக்க பட்ஜெட்டில் 10 புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
விவசாயக் கடனாக ரூ.10 லட்சம் கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
அதிக நிதி ஒதுக்கப்படுவதன் மூலம் கிராமப்புறங்களில் ஏழ்மை ஒழிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சிறுகுறு விவசாயிகள் எளிதில் கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
குறைந்த வட்டியில் கடன் வழங்க மத்திய அரசின் பணமதிப்பிழப்பு வழிவகை செய்யும்.
தேசிய வேளாண் சந்தைகளின் கீழ் ஒருங்கிணைப்பு சந்தைகளின் எண்ணிக்கை 558 ஆக உயர்த்தப்படும்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக ரூ.1.84 லட்சம் கோடி ஒதுக்கப்பட உள்ளது.
ஏழைகளின் உடல்நலத்தைக் காக்கும் வகையில் அரசு ஒரு செயல்திட்டத்தைத் தயாரித்துள்ளது. 2025-க்குள் காசநோய் முழுமையாக ஒழிக்கப்படும்.
ஜார்க்கண்ட் மற்றும் குஜராத்தில் புதிதாக இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்படும்.
தாழ்த்தப்பட்டோருக்கு அளிக்கப்படும் நிதியுதவி ரூ. 52,393 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
* பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு நாட்டைவிட்டு தப்பியோடுபவர்களின் சொத்துக்களை முடக்க புதிய சட்டம் இயற்றப்படும்.
* தலைமை தபால் அலுவலகங்களில் பாஸ்போர்ட் விநியோகிக்க வழிவகை செய்யப்படும்.
* உயர் கல்விக்கு நிதியுதவி:
உயர் கல்வியில் புதிய கண்டுபிடிப்புக்களுக்கு நிதியுதவி.
யுஜிசியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
அங்கீகாரம், தரவரிசை மற்றும் தன்னாட்சி அந்தஸ்தின் அடிப்படையில் கல்லூரிகள் அடையாளம் காணப்படும்.
இளைஞர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் ‘ஸ்கில் இந்தியா’ திட்டம் 2015-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் நாடு முழுக்க 100 சர்வதேச இந்திய திறன் வளர் மையங்கள் நிறுவப்பட உள்ளன.

ஜவுளித்துறை சிறப்புத் திட்டம் போல், தோல் மற்றும் காலணி துறைகளிலும் புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்.

கிராமப்புற மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள்
பிரதான் மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்துக்கு இந்த நிதியாண்டில் ரூ.27,000 கோடி ஒதுக்கீடு
வரும் மார்ச் 2018-க்குள் அனைத்து கிராமப்புறங்களிலும் மின் வசதி
நாடு முழுவதும் ப்ளூரைடு பாதிப்புள்ள 28,000 குடிநீர் ஆதாரங்கள் அடுத்த 4 ஆண்டுகளில் சுத்தப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான குடிநீர்

தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பெண்களின் பங்களிப்பு 40%ல் இருந்து 55% ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை மேலும் வலுப்படுத்த விண்வெளி தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும்.
100 நாள் வேலைதிட்டத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.48,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe