நாய்க்கு பிஸ்கட் போட்டால் நன்றி காட்டும். உங்களால் கைகூட தட்ட முடியாதா? அமைச்சர் ‘தர்மான கிருஷ்ணதாஸ்’ விமர்சனம்.
‘மெகா ஜாப் மேளா’ தொடக்க விழாவில் பங்கேற்ற ஆந்திரப் பிரதேஷ் சாலை மற்றும் கட்டிடத் துறை அமைச்சர் தர்மான கிருஷ்ணதாஸ் செய்த விமர்சனத்தால் அங்கு வந்திருந்த இளைஞர்கள் வியப்பால் வாயடைத்துப் போயினர்.
இளைஞர்களை நாய்களோடு ஒப்பிட்டார் என்று எதிர்க்கட்சிகள் ஆத்திரமடைந்தன.
சாலை மற்றும் கட்டிடத் துறை அமைச்சர் தர்மான கிருஷ்ணதாஸ் மீண்டும் ஒருமுறை உளறி கொட்டினார்.
ஸ்ரீகாகுளம் மாவட்டம் நரசன்னபேட்டை யில் சனிக்கிழமை மெகா ஜாப் மேளா தொடக்க விழாவில் அமைச்சர் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் வேலையற்ற இளைஞர்களை உத்தேசித்து பேசிய பேச்சுக்களால் புயல் கிளம்பியது.
” ஒரு பிடி பச்சை புல் போட்டால் மாடு பால் கொடுக்கிறது. நாய்க்கு பிஸ்கட் போட்டால் விசுவாசத்தைக் காட்டுகிறது. செய்த உதவிக்கு மனிதன் நன்றியோடு இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு முதலமைச்சர் ஒய்எஸ் ஜகன் 4 லட்சம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ள செய்தியை தெரிவித்தாலும் யாரும் கை கூட தட்டவில்லை. உங்களுடைய சிந்தனை போக்கு மாறவேண்டும்” என்று அமைச்சர் கிருஷ்ணதாஸ் விமர்சனம் செய்தார்.
“முதல்வர் ஜெகன் இத்தனை நல்ல செயல்கள் செய்தாலும் கை தட்டாமல் அமர்ந்துள்ளீர்கள். ஒரு நியாயமான மனிதனுக்கு என்ன தேவை? உங்கள் கைதட்டல் உற்சாகம் தானே!” என்று வினவினார்.
ஒய்எஸ்ஆர்சிபி பதவிக்கு வந்த உடனே கிராம வாலென்டீர்கள், செயலக பணியிடங்கள் ஏற்படுத்தினார் என்று நினைவு படுத்தினார். இளைய தலைமுறைக்கு டிசிப்ளின் குறைந்துவிட்டது என்று குற்றம் சாட்டினார். அமைச்சரின் விமர்சனத்தால் அங்கே சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அரசாங்கத்தின் செயல்முறை பற்றி அமைச்சர் பேசிக்கொண்டிருந்தபோது சபையிலிருந்தவர்களிடமிருந்து உற்சாக வரவேற்பு கிடைக்காததால் அமைச்சர் அதிருப்தி வெளிப்படுத்தினார்.
ஆனால் தன் விமர்சனத்திற்கு அமைச்சர் விளக்கம் கூட அளித்தார். நாலு லட்சம் வேலை வாய்ப்பு ஏற்படுத்திய முதல்வர் ஜெகனிடம் இளைஞர்கள் விசுவாசத்தோடு இருக்க வேண்டும் என்றார்.
அந்த உத்தேசத்தில் தான் அவ்வாறு பேசியதாக தெரிவித்தார் .வேறு எந்த கெட்ட நோக்கத்தோடும் பேசவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தன் பேச்சை திரித்துக் கூறுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.