தமிழகத்தின் 34வது மாவட்டமாக உதயமானது கள்ளக்குறிச்சி. விழுப்புரத்தை பிரித்து உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
தமிழகத்தின் 34-வது மாவட்டமாக உதயமானது கள்ளக்குறிச்சி. புதிய மாவட்டம் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் என இரு கோட்டங்களை உள்ளடக்கியது.
கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, கல்வராயன்மலை ஆகிய 6 வட்டங்கள் இதில் உள்ளன!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க விழாவில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தைப்பொங்கல் திருநாள் அன்று அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு; ஆயிரம் ரூபாய் தமிழக அரசு வழங்கும்.. என்று அறிவித்தார்!
தொடர்ந்து நலத்திட்ட உதவிகளும் நிகழ்ச்சியில் வழங்கப் பட்டன.