திசா குற்றவாளிகள் நால்வரையும் என்கவுண்டரில் கொன்றனர் போலீசார்.
இன்று காலை 3 மணிக்கு சீன் ரீ கன்ஸ்டிரக்சன், அதாவது சம்பவம் குறித்து நடித்துக் காட்டுவதற்காக அழைத்து வந்தபோது அந்த இடம் பற்றி நன்கு தெரிந்த குற்றவாளிகள் போலீஸாரிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்து, மிரட்டியதாகவும், அங்கிருந்து தப்பிக்க முயன்றதாகவும் கூறப் படுகிறது. இந்நிலையில், நால்வரையும் போலீசார் என்கவுன்டர் செய்து கொன்றதாகவும் தெரிகிறது.
அந்த இடத்திற்கு இன்று காலை சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் பார்வையிட்டு வருகிறார். இனிமேல்தான் போலீசில் இருந்து அதிகாரபூர்வமாக செய்தி வெளிப்பட வேண்டும்.
திசாவை எங்கே கொன்றார்களோ எந்த நேரத்தில் கொன்றார்களோ அதே இடம் அதே நேரத்தில் குற்ளவாளிகளும் கொல்லப்பட்டது வியப்பளிக்கிறது. தற்காப்புக்காக போலீசார் எடுத்த முடிவாகக் கூறப்படுகிறது.