தலைநகர் தில்லி உட்பட பல்வேறு வட மாநிலங்களில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப் பகுதியில், பூமியின் மேற்பரப்பில் இருந்து 190 கிமீ., ஆழத்தில் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.3 என பதிவாகியுள்ளது.
இதை அடுத்து தில்லி, என்.சி.ஆர். எனப்படும் தேசிய தலைநகர் மண்டலம் மற்றும் சில வடமாநிலங்களில் திடீர் நில அதிர்வு உணரப்பட்டது. அப்போது வீடுகளில் அலங்கார விளக்குகள், மின்விசிறிகள் உள்ளிட்டவை அசைந்து ஆடின. இந்த நில அதிர்வு பாகிஸ்தானிலும் உணரப்பட்டது.