மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜேட்லியின் பிறந்தநாளையொட்டி, அவரது உருவச்சிலையை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைத்தார்.
மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜெட்லியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பீகார் தலைநகர் பாட்னாவில் அமைக்கப்பட்டுள்ள அவரது உருவச்சிலையை, அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அருண் ஜெட்லியின் குடும்பத்தினர், அம்மாநில துணை முதலமைச்சர் சுஷில் மோடி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.