நெல்லை: அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சக்திவேல் முருகன் மாரடைப்பால் இன்று காலமானார். இவர், 2001 – 2006 காலகட்டத்தில் அம்பாசமுத்திரம் தொகுதியில் இருந்து சட்டமன்றத்துக்குத் தேர்வு செய்யப் பட்டவர் !
சக்திவேல் முருகன் மறைவுக்கு தென்காசி பத்ரிகையாளர் சங்கம் சார்பில் அஞ்சலிக் குறிப்பு வெளியிடப் பட்டது. அதில்…
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நெல்லை மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மகாகிருஷ்ணன் தந்தையுமான சக்திவேல் முருகன் அவர்கள் இன்று காலை 9 மணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு நம் இரங்கலைத் தெரிவித்துக் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தென்காசி பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் தெரிவிக்கப் பட்டது.