திருமலா திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைன் முன்பதிவு முறையில் மாற்றம் செய்துள்ளது.
திருமலையில் அறை பதிவு செய்வதில் மாற்றங்கள் செய்திருப்பதாக டிடிடி அறிவித்துள்ளது.
வாடகை அறைகளை முன்பதிவு செய்து கொள்ளும் பக்தர்கள் காஷன் டிபாசிட் செலுத்தும் முறையை அமல்படுத்தி உள்ளது.
எத்தனை ரூபாய்க்கு அறை பதிவு செய்கிறோமோ அதே அளவு பணம் மேற்கொண்டு செலுத்த வேண்டும். பக்தர்கள் அறையை காலி செய்யும்போது டெபாசிட் திரும்ப தரப்படும் என்று திதிதே தெரிவித்துள்ளது.
இந்த மாத கடைசியில் ஆன்லைன் முன்பதிவில் மாற்றங்கள் செய்யப் போவதாக டிடிடி கூறியுள்ளது.