spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்ரவீந்திரநாத் எம்.பி., மீது இஸ்லாமியர்கள் தாக்குதல்! இந்து தமிழர் கட்சி கண்டனம்!

ரவீந்திரநாத் எம்.பி., மீது இஸ்லாமியர்கள் தாக்குதல்! இந்து தமிழர் கட்சி கண்டனம்!

- Advertisement -
p ravindranath

தேனி எம்பி ஓபி ரவீந்திரநாத் குமார் மீது இஸ்லாமியர்கள் தாக்குதல் !! இந்து தமிழர் கட்சி கண்டனம்.

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பெருமதிப்பிற்குரிய ஓ பி ரவீந்திரநாத் குமார் எம் பி அவர்கள் மீது கம்பத்தில் இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்த அடிப்படைவாத குழுக்களில் தூண்டுதலில் காரணமாக சிஏஏ சட்டத்திருத்தம் பாராளுமன்றத்தில் கொண்டுவர ஆதரவாகப் பேசிய காரணத்தால் திரு ரவீந்திரநாத் குமார் கட்சி நிகழ்ச்சி முடித்துவிட்டு வீடு திரும்பும்சூழ்நிலையில் காவல்துறை பாதுகாப்பு இருக்கும் நிலையில்கருப்புக்கொடி காண்பித்து கூட்டமாக சேர்ந்து மிரட்டி கார் மீது தாக்குதல் நடத்தி “முர்தாபாத்” என்று அதாவது ஒழிக என்று தூய தமிழில் கோஷம் போட்டு இருக்கிறார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியிடம் நேரடியாக சந்தித்து அவர் தெரிவித்த கருத்துக்கு கண்டனத்தை, எதிர் கருத்தை சொல்வதற்கு ஜனநாயகத்தில் முழு உரிமை இருக்கிறது.

அதை விட்டுவிட்டு இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்த இவர்கள் தவறான நபர்களின் வழிகாட்டுதல் காரணமாக இதுபோன்று எதிர்மறை செயல்களில் எதிர்வினை செயல்களில் ஈடுபடுவது சரியானதாக தெரியவில்லை.

இந்து தமிழர் கட்சியின் சார்பில் இந்த தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

அதே நேரத்தில் தேனி மாவட்டத்தில் கம்பத்தில் இந்த இஸ்லாமிய மத அடிப்படைவாத குழுக்களின் காரணமாக கடந்த சில வருடங்களாக நடைபெற்றுவரும் சட்டவிரோத, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து இந்து மத நம்பிக்கை யாளர்களை அச்சுறுத்தக்கூடிய, இந்து இயக்க பிரமுகர்களை கொலை செய்யக்கூடிய, கொடுஞ்செயல்கள் பல நடந்திருக்கிறது. என்பது கடந்தகால வரலாறு.

இதை மனதில் கொண்டு திரு ரவீந்திரநாத் குமார் எம்பி அவர்களுக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வேண்டும்.

இந்த சம்பவத்தை சாதாரண ஒரு கருப்புக். கொடி ஆர்ப்பாட்டமாக காவல்துறை கணக்கிட கூடாது!!

நாளை ஒரு பெரிய அசம்பாவித செயல்களுக்கான முன்னோட்டமாகவே எச்சரிக்கை உணர்வுடன் எடுத்துக்கொள்ள வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்
கொள்கிறோம்.

காவல்துறை உதவி ஆய்வாளர் வில்சன் அவர்களை சுட்டுக் கொன்றவர்கள், நாளை என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்!!

திமுக எஸ்டிபிஐ பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா… உள்ளிட்ட பல இயக்கங்கள் பாரத அரசு கொண்டுவந்த குடியுரிமை பதிவு சம்பந்தமான சட்ட திட்டத்தை பற்றி மக்களிடம் தவறான புரிதல் உருவாக்கிட, எதிர்மறை ,அவதூறு பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள்.

அது போன்ற நபர்களை கைது செய்ய வேண்டும். மேலே குறிப்பிட்ட மத அடிப்படைவாத பழமைவாத குழுக்களை தடை செய்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய பாதுகாப்பு முகமை என்.ஐ.ஏ தேனி மாவட்டத்தில் கண்காணிப்பு செய்து, தேச விரோத கும்பலை கைது செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கத்தை இந்து தமிழர் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்… – என்று இந்து தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் ராம ரவிக்குமார் கேட்டுக் கொண்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe