Home சற்றுமுன் திமுக.,வுக்கு அன்றே வழிகாட்டிய ஔவைப் பாட்டி! பூமி (பத்திரத்தை) திருத்தி உண்ணுன்னு சொல்லிருக்காம்ல?!

திமுக.,வுக்கு அன்றே வழிகாட்டிய ஔவைப் பாட்டி! பூமி (பத்திரத்தை) திருத்தி உண்ணுன்னு சொல்லிருக்காம்ல?!

ஓ.. பஞ்சமி பூமிய ஆட்டயப் போட்டு… பட்டாவா திருத்தி… தலைமறைக்கும் உக்காந்து தின்னோ தின்னுன்னு உண்கிறதை அன்னைக்கே சொல்லிருச்சா… இந்த ஔவை கெழவி? – என்று சமூகத் தளங்களில் கேலியும் கிண்டலும் தூள் பறக்கின்றன.

பூமி திருத்தி உண்! – மினிஸ்டர் இதை சொல்றப்போ பூமி பத்திரத்தை திருத்தி உண்கிற தீம்கா கனிமொழி, டி.ஆர். பாலுவுக்கு போகஸ் வைக்கிறாரு கேமராமேன். குறியீடு போல.. ???? பாருங்க பாருங்க… என்று வீடியோவைப் பகிர்ந்துள்ளனர் சிலர்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட் உரையின் போது, பூமி திருத்தி உண் – என்ற ஔவைப் பாட்டியின் ஆத்திசூடி அறம்செய விரும்பு தொடங்கும் பாடல் வரியை மேற்கோள் காட்டிப் பேசினார்.

அப்போது, தமிழக எம்.பி.க்களான கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோர் பக்கம் கேமரா காட்சி சென்றது. இதனை சமூகத் தளங்களில் விமர்சித்துவருகின்றனர்.

மேலும், திமுக., முரசொலி அலுவலக மூலப் பத்திரம் விவகாரத்தில், முரசொலி இடம் வாடகைக்கு உள்ள இடம் என்று திமுக., தரப்பு கூறியதால், இதில் உள்ள சந்தேகங்களை பலரும் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், திமுக., (பஞ்சமி) பூமியை (ஆட்டையப் போட்டு),,, (பத்திரத்தை) திருத்தி (பல தலைமுறைக்கும் உக்கார்ந்து) உண் என்பதை வழிகாட்டிச் சொல்லியிருக்கிறார் ஔவை என்று சிலாகிக்கின்றனர் பலர்.

இது குறித்த வீடியோ காட்சிப் பதிவு…

https://dhinasari.com/wp-content/uploads/2020/02/nirmala-speech.mp4

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version