தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிக மழைப் பொழிவைத் தரும் தென்மேற்குப் பருவமழை இந்த முறை சற்று முன்னதாகவே தொடங்குவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
தென்மேற்குப் பருவமழை, கேரளத்தில் அதிகமாக மழைப் பொழிவைத் தரும்.. அடுத்து, கேரளப் பகுதிகளை ஒட்டிய தமிழகத்தின் எல்லை மாவட்டங்களிலும் அப்போது மழை இருக்கும். குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் சீசன் தொடங்கும் நேரமும் தென்மேற்குப் பருவ மழையை ஒட்டியே இருக்கும். வழக்கமாக மே மாத இறுதியில், அல்லது ஜூன் மாத முதல் வாரத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும். இந்த நிலையில், வரும் மே மாதம் 27ஆம் தேதி கேரளத்தில் பருவமழைக் காலம் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இது வழக்கமான காலத்தை விட ஓரிரு நாட்கள் முன்னதாகவே தொடங்குவதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.