புது தில்லி : தில்லியில் நடைபெற்ற இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மைய திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, தவுலா கவுன் பகுதியில் இருந்து துவாரகாவிற்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.
மொத்தம் 14 நிமிடங்கள் தில்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்த மோடி, ரயிலில் பயணித்த சக பயணிகளுடன் கலந்துரையாடினார்.
முதலில் பிரதமர் மெட்ரோ ரயிலில் பயணிக்க வந்ததைக் கண்டு ஆச்சரியப் பட்ட பயணிகள், அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். சக பயணிகளுடன் பிரதமர் மோடியும் சிரித்து பேசியபடி பயணித்தார்.
தில்லியில் விவிஐபி.,க்கள் பயணிக்கும் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவே பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் பயணம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விழாவில் கலந்து கொள்ள பகல் 3.13 முதல் 3.27 வரை மோடி மெட்ரோ ரயிலில் பயணித்தார். பின்னர் விழா முடிந்து திரும்பும் போதும் துவாரகாவில் இருந்து தவுலா கவுன் மெட்ரோ நிலையத்திற்கு 4.39 மணி முதல் 4.54 மணி வரை மோடி பயணம் செய்தார்.
இதனைத் தன் டிவிட்டர் பக்கத்திலும் மோடி பகிர்ந்தார். அந்தப் பதிவு:
Travelled on the Delhi Metro to Dwarka, and on the way back.
I had gone there to lay the foundation stone for a state of the art convention centre. Here are pictures from the Metro. pic.twitter.com/3dCS2JHnQQ
— Narendra Modi (@narendramodi) September 20, 2018
அதுபோல், போக்குவரத்து விதிகளை மதித்து கடைப்பிடிப்பதில் மோடி முன்னுதாரணத்துடன் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவு உலாவருகிறது. ராகுல், ஸ்டாலின் உள்ளிட்டோர் காரில் பயணம் செய்யும் போது சீட் பெல்ட் அணியாமல் செல்லும் படங்களும், மோடி சீட் பெல்ட் அணிந்து முன்னுதாரணத்துடன் செல்லும் படங்களும் இணையதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.