Home இந்தியா கூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு!

கூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு!

பத்தனம்திட்டை: கூட்டம் கூட்டமாக பக்தர்கள் சேர்ந்து வரும் சபரிமையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாகவும், இந்தத் தடை உத்தரவு இன்று இரவு முதல் அமலுக்கு வருவதாகவும் பத்தனம்திட்டை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து, அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்கு தரிசனத்துக்கு வரத் தொடங்கி உள்ளனர். அவ்வாறு வரும் ஒருசிலரையும், பக்தர்கள் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பி வருகின்றனர். ஆனால், அவர்களை தடுத்து போலீஸார் பெண் பக்தர்களை சபரிமலை நோக்கி அனுப்பி வைக்கின்றனர். இதனால் பெரும் வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது.

இதனால் கல்லெறி சம்பவங்களும் அங்கங்கே தடியடியும் நடத்தப் பட்டன. வன்முறை வெடித்ததால், பத்தனம்திட்டை மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version