நியூயார்க்: அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், ஓபாமா வீடுகளுக்கு வெடிகுண்டுகள் அனுப்பப் பட்டதாக வந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், இவரது மனைவி ஹிலாரி கிளிண்டன். இருவரும் நியூயார்க் வடக்குப் பகுதியில் உள்ள சாபாக் என்ற நகரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று நண்பகல் 1 மணி அளவில் இவர்களது வீட்டில் வெடிகுண்டுகள் அனுப்பப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
BREAKING: Secret Service intercepts suspicious packages addressed to the residences of former President Obama and former First Lady Hillary Clinton. Working with our law enforcement partners on the investigation. Our Statement: https://t.co/lJdTn04KmI
— U.S. Secret Service (@SecretService) October 24, 2018
தகவல் அறிந்த எப்.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் நியூகேஸில் போலீசார் அங்கு விரைந்து சென்று வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த நேரம் அவர்களது வீட்டில் கிளிண்டனும், ஹலாரியும் இல்லை எனப்படுகிறது.
பின்னர் ஒபாமா வீடு, கிளிண்டன் வீடுகளுக்கு வெடிகுண்டுகள் அனுப்பப் பட்டதாக வந்த ஊடகச் செய்திகள் தவறானவை என்று புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு அடங்கியது.
CLARIFICATION: At this time the Secret Service has intercepted TWO suspicious packages – one in NY and one in D.C. Reports of a third intercepted package addressed to the WH are incorrect. We refer media to our statement: https://t.co/lJdTn04KmI
— U.S. Secret Service (@SecretService) October 24, 2018