திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பாக ஒரு அறிவிப்பு என்னவென்றால்…
திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவைப்படும் உதவிகளுக்கு 8680999966 இந்த எண்ணில் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டால் தேவையான உதவிகள் கிடைக்கும்
ஆம்புலன்ஸ் போலீஸ் உதவி மருத்துவ உதவி மேலும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களுக்கு பார்க்கிங் பற்றிய உதவி இது போன்ற பல உதவிகளுக்கு இந்த எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் குறுந்தகவல் அனுப்பினால் உடனடியாக உங்களுக்கு உதவி கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டு புதிதாக online மூலம் கார் பார்க்கிங் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. www.tvmpurnami.in என்ற முகவரியில் புக் செய்து அதற்கான கடவுச்சீட்டை தரவிறக்கம் செய்து காரில் ஒட்டி வரவும் நேரடியாக நீங்கள் தேர்வு செய்த பார்க்கிங் இடத்திற்கு அனுமதிக்கப்படுவர்.