தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள விளாத்திகுளம் அம்பாள் வித்யாலயா பள்ளியில் பயிலும் 8ம் வகுப்பு மாணவன் அக்சய் (axai) கஜா புயல் நிவாரண நிதியாக தான் சேமித்து வைத்து இருந்த ரூ.25 ஆயிரத்தை வழங்கியுள்ளான்.
மேலும் மாணவன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தினகரன், திருநாவுக்கரசர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் புயல் பாதித்த மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு எல்லா கட்சியினரும், தேர்தலுக்காக செலவிடுவது போன்றும், பணியாற்றுவதும் போன்று உதவ வேண்டும் தவிர, அரசியல் செய்ய வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்து யூடிப்பில் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.