சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு அரசு துணையாக இருக்க வேண்டும் என்று கூறிய பிரேமலதா விஜயகாந்த், இந்த விவகாரத்தில் விஜயகாந்த் நடித்த சினிமா படங்கள்தான் நினைவுக்கு வருது என்று கூறினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பிரேமலதா விஜயகாந்த்.
அப்போது அவர், ஐஜி. பொன் மாணிக்கவேல் விவகாரத்தில் விஜயகாந்த் நடித்த படங்கள் தான் நினைவுக்கு வருகின்றன. உண்மையாக உழைப்பவர்களுக்கு அழுத்தம் கொடுத்தால் எப்படி நியாயம் கிடைக்கும்? என்று பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.