Home உள்ளூர் செய்திகள் அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : அடுத்த 24 மணி நேரத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலில் கிழக்குத் திசை காற்று வலுப் பெற்றுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

கடலோர பகுதிகளில் சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது

1 COMMENT

  1. Why illaiya raja should be given special status? Undoubtedly he is a staunch hindu Shiva bhakathar ranana maharishi bhakthar. Doesn’t mean he should be given a special status and for that higher police officers expressing their regret is not appreciable. He commercialy wrote film songs earned money that S all. He too is a ordinary citizen in front of procedures and law

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version