சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ், சென்னை, கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை ஈகா திரையரங்கம் முதல் கோயம்பேடு மேம்பாலம் வரையிலான சுமார் 9.5 கீ.மீ. தொலையில் 437 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன் இ.கா.ப., அவர்கள் (28.11.2018) காலை பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஈகா திரையரங்கம் சந்திப்பு மற்றும் அண்ணா வளைவு அருகிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை துவக்கி வைத்தார்.