புது தில்லி: ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கு மோடி அதிர்ச்சி தெரிவித்து டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்த நிலையில், உர்ஜித் படேல் ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
வாராக் கடன் பிரச்னையில் சிக்கித் தவித்து வரும் வங்கிகளிடம் கெடுபிடி காட்டுவதை ரிசர்வ் வங்கி தளர்த்த வேண்டும். ரிசர்வ் வங்கியிடம் உள்ள பல லட்சம் கோடி ரூபாயை நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்காக விடுவிக்க வேண்டும் என மத்திய அரசு வற்புறுத்தி வருகிறது.
ஆனால், அக்.27 ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரல் ஆசாரியா,’ ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை மதிக்காத அரசுகள், மிக விரைவில் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும்’ என்றார்.
இந்நிலையில், நவ. 19ஆம் தேதி நடந்த ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய கூட்டத்துக்குப் பின்னர் ஓரளவு முடிவுக்கு வந்தது.
தற்போது 5 மாநில தேர்தல்கள் முடிந்த நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை இன்று ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா வங்கித்துறைக்கு பேரிழப்பு. வங்கி துணை ஆளுநராகவும், ஆளுநராகவும் 6 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பொருளாதார சிக்கலின் போது ஆழமான புரிதலை கொண்டவராக இருந்தார். இவர் மிக சிறந்த பொருளாதார நிபுணர். ராஜினாமா . வங்கியின் நிதி நிலையில் நிலைத்தன்மையை ஏற்படுத்தியவர். அவருடன் பணியாற்றிய காலம் மிக இனிதாக இருந்தது. உர்ஜித் படேலை மிஸ் பண்ணுவதாக மோடி டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.