திரிபுரா மாநிலத்தில் வெற்றி பெற்றதைப் போன்று தமிழகத்திலும் பாஜக வெற்றிபெற வேண்டும் இன்று பிரதமர் மோடி பாஜக நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டார் .. பாஜக
பாஜக நிர்வாகிகள் கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடி வருகிறார். கேரளம் தமிழகம் புதுவை என நிர்வாகிகளுடன் மோடி நடத்தும் கலந்துரையாடல்களுக்கு கட்சியினர் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. நிர்வாகிகள் ஆர்வமுடன் மோடியுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர் .
இந்த நிகழ்ச்சியின்போது நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி உத்வேகமூட்டும் விதத்தில் சில தகவல்களை கூறுகிறார் … மத்திய அரசு மேற்கொண்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் சலுகைகள் மருத்துவ காப்பீடு உள்ளிட்ட திட்டத்தின் பலன்கள் இவற்றை மக்கள் மத்தியில் பிரபலமாக மக்களிடம் திட்டத்தின் பலன்கள் குறித்து எடுத்துக் கூறி அவர்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடுமாறு நிர்வாகிகளுக்கு கட்டளையிடுகிறார்.
மேலும் காங்கிரஸ் அரசில் மேற்கொள்ளப்பட்ட ஊழல்களுடன் கூடிய சுயநல திட்டங்களால் நாட்டின் பொருளாதாரம் எப்படி சீர்குலைந்தது என்பதை எடுத்துக் கூறி காங்கிரசின் நயவஞ்சகத்தை வெளிப்படுத்துமாறும் கூறுகிறார்…
இன்று தமிழகம் புதுச்சேரி ஆகியவற்றின் நிர்வாகிகளுடன் கலந்துரையாட நிகழ்த்திய பிரதமர் மோடி மேற்கண்ட விவரங்களையும் அனைவருடனும் பகிர்ந்து கொண்டார்…
அப்போது பேசிய அவர் நாட்டின் ஜனநாயகத்தை காப்பவர்கள் மக்கள்தான்; காங். தனது தந்திரத்தால் அதை அழிக்கப் பார்க்கிறது…. என்றார்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் திரளான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்