திருவாரூர் தொகுதிக்கான இடைத் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிட உள்ளதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது.
நேற்று மாலை தமிழக பாஜக., தலைமையகமான கமலாலயத்தில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில், எடுக்கப்பட்ட முடிவுகளின் படி…
கஜா புயலால் திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்துவது உகந்தது அல்ல.
தேர்தல் அதிகாரியை சந்தித்து தேர்தலை தள்ளி வைக்க கோரிக்கை விடுக்க உள்ளோம்.
திருவாரூரில் தேர்தல் நடந்தால் பாஜகவின் முழுமுடிவை தமிழிசை எடுப்பார். நாங்கள் தேர்தலை கண்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று பாஜக., தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்.