spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்பொங்கலோ பொங்கல்... பானை வைக்க சரியான நேரம்! சிறப்புத் தகவல்கள்!

பொங்கலோ பொங்கல்… பானை வைக்க சரியான நேரம்! சிறப்புத் தகவல்கள்!

- Advertisement -

பொங்கல் வைக்க உகந்த நேரங்கள்: தை மாதம் பிறந்தாலே நம் ஞாபகத்திற்கு வருவது பொங்கல் பண்டிகைதான். பொங்கல் பண்டிகை தொன்றுதொட்டு தமிழர்களால் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வரும் முக்கிய பண்டிகையாகும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த பொங்கல் பண்டிகையை சீரும் சிறப்புமாக கொண்டாட நல்ல நேரங்களை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

போகிப்பண்டிகை :

???? போகிப்பண்டிகையின் தொடக்கமே வீட்டில் காப்புக் கட்டும் நிகழ்ச்சியாகும். தைத்திருநாளை வரவேற்க, வீட்டின் கூரையில் காப்புக் கட்டிய பிறகே, பொங்கல் கொண்டாட்டம் தொடங்குகிறது.

காப்புக் கட்டுவதின் முக்கிய நோக்கம் பாதுகாப்பு, ஆரோக்கியம் கிடைக்கும் எனவும், சுத்தமாகிய வீட்டிற்குள் கெட்டது எதுவும் வராமல் இருப்பதற்காவும் மாவிலை, வேம்பு இலை, ஆவாரம் பூ, பூளைப்பூ ஆகியவற்றை சேர்த்து கட்டப்படும்.

???????? காப்பு கட்ட உகந்த நேரம் :????????

காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை
பகல் 12.00 மணி முதல் 2.00 மணி வரை
மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

தைப்பொங்கல் :

????தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்பது அறுவடைத் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது.

????தைப்பொங்கல் என்பது நமக்கு நெல்லை விளைவிக்க எவையெல்லாம் உதவியதோ அவற்றிற்கெல்லாம் நன்றிகூறி வழிபடுவது. புதிதாக விளைந்த நெல்லை அறுவடை செய்து அரிசியாக்கி பொங்கலிட்டு இயற்கை தெய்வத்துக்கும், சூரியன், மாடு உட்பட உதவிய எல்லாவற்றிற்கும் நன்றி செலுத்துவதே பொங்கல் பண்டிகையாகும்.

???????? பொங்கல் வைத்து வழிபட உகந்த நேரம் :????????

காலை 08.00 மணி முதல் 09.00 மணி வரை
காலை 10.30 மணி முதல் 11.00 மணி வரை
பகல் 12.00 மணி முதல் 01.00 மணி வரை
மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை
இரவு 07.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை

உழவர் திருநாள்-மாட்டுப் பொங்கல் :

????உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கிய இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி கூறும் நாளே மாட்டு பொங்கலாகும். இந்நாள் தைப்பொங்கலுக்கு மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

????மக்களின் வாழ்வில் ஒன்றிய கால்நடைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.

???? ???? மாட்டுப் பொங்கல் வைத்து வழிபட உகந்த நேரம் :????????

காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரை
பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை
மாலை 04.00 மணி முதல் 05.00 மணி வரை
மாலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை

பொங்கல் பண்டிகையை உற்றார், உறவினர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.
– சாமி காசிராஜன், சின்மயா நகர் – சென்னை

???? தினசரி.காம்????

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe