மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்க தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
ஜெயலலிதா நினைவிடம் அமைக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்! மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கத் தடை கோரிய மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் தள்ளுபடி செய்தனர்.
தலைவர்களுக்கு நினைவிடம் அமைப்பது அரசின் கொள்கை முடிவு என்றும், அதில் நீதிமன்றம் தலையிடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.