குடியரசு தினவிழாவையொட்டி சென்னையில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்! உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் இருந்தனர்.
குடியரசு தினத்தையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற்றது.
குடியரசு தினத்தை முன்னிட்டு, 2019-ஆம் ஆண்டின் வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கம் சென்னையை சேர்ந்த சூர்யகுமார், தேனி மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித்குமார், தஞ்சையை சேர்ந்த ஸ்ரீதர் ஆகியோருக்கு முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.
புதுச்சேரியில் நடைபெற்ற குடியரசு தின விழா துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதையை விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.