குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் பகுதியிலிருந்து 82 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சலங்புர். இங்கே அமைந்துள்ளது தான் சுவாமி நாராயண் சம்பிரதாயத்தின் வழியில் அமைந்த இந்த அனுமன் ஆலயம்
சோலங்புர் அனுமன் ஆலயத்தை சுவாமி நாராயண் சம்பிரதாய வழியில் வந்த சத்குரு கோபாலானந்த சுவாமி அமைத்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் மிகப் புகழ்பெற்ற அனுமன் ஆலயமாக திகழ்கிறது இந்த சலங்புர் அனுமன் கோயில். தினந்தோறும் 5000 பேருக்கு குறையாமல் மதிய நேரத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. சனிக்கிழமைகளில் இது பத்தாயிரத்திற்கும் அதிகமாகவே இருக்கும்.!
இந்த ஆலயத்தில் அனுமனுக்கு குடியரசு தின விழாவையொட்டி இன்று தேசியக்கொடி வைக்கப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டிருந்தது!