நாட்டின் 70வது குடியரசு தினம் இன்று கொண்டாடப் பட்ட்டு வருகிறது. இன்று காலை தில்லியில் பனி மூட்டம் அதிகமாக இருந்ததால், குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
குடியரசு தின விழா நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப் பட்டது. தில்லி அமர்ஜவான் ஜோதியில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.