மதுரைக்கு வரும் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் மாநாடு ஓர் அரசியல் திருப்புமுனையாக அமையும் என்று கூறியுள்ளார் தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்.
மேலும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக மதுரை வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டுபவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று கூறினார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்!
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பாஜகவை குறை சொல்லி கேலி பேசுபவர்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான பொதுக் கூட்டம் பதில் சொல்லும் என்றும், அது அரசியல் திருப்பு முனையாக அமையும் என்றும் கூறினார்.