தேர்தலில் யாரும் நோட்டாவுக்கு வாக்களிக்காதீர்கள் என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன். அவர், தேவனாம்பட்டினத்தில் மக்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சியினை நடத்தினார்.
அப்போது பேசிய அவர், ஓட்டு என்பது மக்களின் உரிமை என்றும் நோட்டாவிற்கு மட்டும் ஓட்டு போடாதீர்கள் எனவும் கேட்டுக்கொண்டார்
ஒருவர் மீதான வெறுப்புதான் நோட்டாவுக்கு ஓட்டு போடக் காரணம் என்றால், அந்த வெறுப்பு மக்கள் நீதி மையத்திற்கான விருப்பமாக மாற வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார் கமல்!