சென்னையில் குருநானக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்து ஆன்மிக சேவைக் கண்காட்சியில் பெருந்திரளான ஹிந்துக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். வழக்கம் போல் இந்த ஆண்டும் இந்தக் கண்காட்சி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், இந்து ஆன்மீக கண்காட்சி நடைபெறும் கல்லூரி வாசலில் கண்காட்சிக்கு வந்து செல்லும் இந்துக்களிடம் இப்பொழுது சிலர் கிறிஸ்துவ பிரசார நோட்டீஸ்களை விநியோகித்து வருகின்றனர். இது, கண்காட்சிக்கு வந்து செல்லும் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளதுடன், பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நம்முடன் அதிர்ச்சி தரத்தக்க தகவலைப் பகிர்ந்து கொண்டார் ஓம்காரம் செந்தில் என்ற அன்பர்.
அவர் இதுகுறித்துக் கூறியபோது, நான் இன்று இந்து ஆன்மிக சேவைக் கண்காட்சிக்கு சென்றிருந்த போது, இந்த நோட்டீஸ் கொடுக்கப் பட்டது.
எங்களிடம் தரப்பட்ட நோட்டீஸில் ‘பைபிளில் சிவலிங்க வழிபாடு’ என்ற தலைப்பில் எதோ எழுதப் பட்டிருந்தது. அந்த நோட்டீஸில் தொடர்புக்கு சிவ முருகேசன் என்ற பெயர் குறிப்பிடப் பட்டு, செல் : 9941405404, 9514596154 என்று இடம் பெற்றிருந்ததால், நாங்கள் அந்த எண்களுக்கு போன் செய்தோம். சிலர் போன் செய்த போது எடுத்துப் பேசவில்லை. நான் போன் செய்தேன். ஓம் நமசிவாய, வாழ்க வளமுடன் என்று சொல்லி போனை கட் செய்து விட்டார்.
இந்த நபர் யார்? ஏன் வேண்டுமென்றே இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சிக்கு வருபவர்களிடம் இந்த நோட்டீஸை விநியோகிக்க வேண்டும். இது ஏதாவது மோதல்களை ஏற்படுத்த என்றே வேண்டுமென்று தூண்டப்படும் வேலையா என்றெல்லாம் எங்களுக்குள் கேள்வி எழுகிறது என்றார்.
ஏற்கெனவே கபாலீஸ்வரர் கோயில் உள்ளே ஏசு படத்தை வைக்க சதி செய்தவர்கள், இப்போது இந்துக்களின் பெயரில் புனைகதைகளையும் கற்பனைகளையும் நோட்டீஸாக அடித்து, இந்துக் கடவுள்களை கேவலப் படுத்தி மோதல்களை உருவாக்கப் பார்க்கிறார்கள். இது போன்ற நோட்டீஸ்களை அச்சடிப்பவர்களை போலீஸார் வேடிக்கை பார்ப்பது மிகக் கேவலம் என்று குமுறுகிறார்கள் ஹிந்து அன்பர்கள்!