திருப்பூர் பெருமாநல்லூரில் நடைபெறும் அரசு விழாவில் பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.
முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் விழா மேடைக்கு வந்திருந்தனர்.
திருப்பூரில் 100 படுக்கைகள் கொண்டை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்; மருத்துவமனை மூலம் சுமார் 1.22 லட்சம் தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் பயன்பெறுவர்.
சென்னை கே.கே.நகரில் 470 படுக்கைகளுடன் கூடிய ஈஎஸ்ஐ மருத்துவமனையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.
டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி திருப்பூர் பெருமாநல்லூரில் இருந்து காணொலியில் தொடங்கி வைத்தார்.
முன்னதாக, கோவை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. பிரதமர் மோடிக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன், அமைச்சர் வேலுமணி, தம்பிதுரை உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.