புது தில்லி: பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதர் நாடு திரும்புமாறு வெளியுறவுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் – மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது, சுமார் 350 கிலோ வெடிபொருள் நிரப்பிய காரை பயங்கரவாதி மோதி வெடிக்கச் செய்ததில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர்.
இந்தத் தற்கொலைத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத் பொறுப்பேற்றுள்ளது. இந்தச் சம்பவத்தால் நாடே கொந்தளித்துப் போயுள்ளது. இன்று பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வரும் நிலையில்,பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரை நாடு திரும்புமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
முன்னதாக புதுதில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்தது.