பாகிஸ்தானுடன் போர் வேண்டுமா? என்று ஒரு வாக்கெடுப்பு நடத்தினால் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருப்போர் கூட, போர் கூடாது என்றே சொல்வார்கள்.
காரணம், தற்போதைய போர்கள் conventional warfare அல்லது பழைய போர்முறையின் கீழ் வராது. காசுக்கு லொண்டி அடிக்கும் ஹவுதிகளே.. ரியாத் மீது மிஸ்ஸைலை சர் சர் என்று விடுகிறார்கள்.
என்னதான் ஓட்டாண்டியானாலும், தற்போது சவுதியிடம் சில்லரையை பெற்ற பாகிஸ்தான். அதை மதரஸா கல்விக்கு என்றோ, அல்லது ரோடு போடவோ என்றெல்லாம் கதைவிட்டு.. ராணுவத்திற்கும், பிதாயீன்களை உருவாக்கவுமே பயன்படுத்தப் போகிறது.
சரி போர் வராது.. வந்தால் என்று வைத்துக்கொள்வோம்..
பாகிஸ்தான் சோமாலியா ஆகும். ஏற்கெனவே அது லேசாய் அப்படித்தான். 1971 மாதிரியான சண்டையாக இருக்காது. நிறைய வான்வெளி தாக்குதல்கள்தான். பார்டர் தாண்டி இந்திய டாங்குகள் நுழைந்தால்.. அவர்கள்.. நியூக் தடவிய மத்தாப்புகளை போடுவோம் என்று நெடுங்காலமாய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
நாம் பதிலுக்கு நாலு நகரங்களை அழித்தால்.. அவர்கள் தில்லி மும்பை சென்னை, பெங்களூர்.. இப்படி நாலு பக்கமும் அடிக்க வாய்ப்பு இருக்கிறது. இப்படி அடிப்பதை தடுக்க. இஸ்ரேலிடம் இருக்கும் டெக்னாலஜியை (IRON DOME) இந்தியா வாங்கி.. இந்தியா முழுக்க அமுல்படுத்துவது சாமான்யமானது அல்ல.
இதைவிட.. பாகிஸ்தானுடன் ஆண்டவனே சொன்னாலும்.. கிரிக்கெட் விளையாட மாட்டோம் என்று 2 பாயின்டை விடலாம். ஒரு இழப்புமாகாது.
போர் என்று ஒன்று வந்தால்.. இழப்புகள் இந்தியாவிற்கு மிக அதிகமாக இருக்கும். போர் அறிவிப்பு ஒன்றே போதும்.. இந்திய பங்கு சந்தைகளின் வீழ்ச்சி முதல்.. இந்திய கரன்ஸி சென்சுரி போடும். பெட்ரோல் விலை 150 போகலாம். விலைவாசி மூன்று நான்கு மடங்கு ஆகலாம். வெளிநாட்டு முதலீடுகளை.. சடக்கென இழுத்துக் கொள்வார்கள். வட்டி ஏறும். பணவீக்கம் எகிறும்.
இதெல்லாம் போர் வரும் அறிவிப்பு வந்தாலே.! போரே வந்துவிட்டால்..?
பேரழிவு.. ராணுவத்தினருக்கும் வீடு, மனைவி, குழந்தை குட்டிகள் உண்டு.. அதை தாண்டி சிவிலியன்களின் இழப்பு.. பிசினஸ், வீடு, இன்னபிற அழியும். முன்னே மாதிரி.. விளக்கை அணைத்துவிடுங்கள்.. என்று சைரன் அலறினால்.. எதிரி ப்ளேன் பாம் போட முடியாமல் தடுமாறுவது எல்லாம் இல்லை. அதெல்லாம் அந்தக்காலம். இப்போது துல்லியமாய் ஈஸ்வரி ரகு வீட்டு மொட்டை மாடி தண்ணீர்தொட்டியை குறி வைக்கலாம்.
ஒன்று.. ரிமோட்டால் ஏவுகணைகள் பறக்கும்.. இல்லை ட்ரொன்கள்.. அதுவும் இல்லை.. தைட் விஷன் விமானங்கள். சங்கு உறுதி.. அதனால்தான் போர் வரவே வராது. கப்பல் படை பற்றி சொல்லவே இல்லை. நடுக்கடலில் போய் போர்க்கப்பல் மூலம் ஒற்றை மிஸைலில்.. ஒரு நாகரிகத்தையே அழித்துவிடலாம்.
இது அனைத்தையும் இது தாண்டியும் பலதும் நடக்கும். இந்திய தேசம் என்றுமே லஷ்மண் ரேகா தாண்டி நடக்காத நாடு.. இதை என்றுமே கடைபிடித்து வந்துள்ளது. அதனால் தற்போதைய நிலமையில் சர்ஜிகல் ஸ்ட்ரைக்கு கூட சாத்தியமில்லை..
ரா ஏஜன்டுகள்.. அவர்களின் கான்ட்ரேக்டர்களால்.. ஜெயிஷ் கும்பல் பாகிஸ்தானிலேயே அழிக்கப்படலாம். அதனால்தான் பாக் போலீஸ் பகவல்பூரில் ஜெயிஷ் தலைமையகத்திற்கு பாதுகாப்பு தர ஆரம்பித்து விட்டனர். இதுதான் சாத்தியம்.
– பிரகாஷ் ராமசாமி