பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தான் முன்னர் கொடுத்த வாக்குறுதியின்படி சரியாக செயல்பட வேண்டும் என்று கூறிய ஒரு நாள் கழித்து இம்ரான்கான் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார்
அதில் தனக்கு மேலும் ஒரு வாய்ப்பு அமைதியை ஏற்படுத்துவதற்குத் தர வேண்டும் என்று கோரியிருந்தார். அதே நேரம் இந்தியா நடவடிக்கை எடுக்க தகுந்த ஆதாரங்களை தங்களிடம் வழங்க வேண்டும் என்று இம்ரான் குறிப்பிட்டிருந்தார். அப்படி இந்தியா ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மீதான நம்பத் தகுந்த ஆதாரங்களை அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என்றும் இம்ரான்கான் தெரிவித்திருந்தார்
முன்னதாக சனிக்கிழமை மோடி பொதுக்கூட்ட பிரசாரத்தில் பேசியபோது இம்ரான்கான் தன்னிடம் தான் ஒரு பத்தான் இன மகன் என்று கூறியிருந்தார். வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள மரியாதை தரத்தக்க குழுவாகத்தான் பஷ்டோ என்ற மொழியைப் பேசும் மக்கள் இருக்கின்றனர்! அந்த வழியில் வந்தவர் தான் தாம் என்று இம்ரான் கான் தன்னிடம் கூறியிருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்
முன்னர் இம்ரான்கான் பதவி ஏற்ற நேரத்தில் மோடி அவருக்கு வாழ்த்துக் கூறிய போது இம்ரான் கான் தன்னிடம் இந்தத் தகவலை பகிர்ந்து கொண்டதாகவும், தான் மரியாதைக்குரிய குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதை இம்ரான்கான் இப்போது நிரூபிக்க வேண்டும் என்றும் மோடி ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்
மேலும் இம்ரான் பதவியேற்றபோது மோடி அவருக்கு வாழ்த்து கூறியதுடன் பாகிஸ்தானில் உள்ள ஏழ்மை விலகவும் கல்வி இல்லாமை அறியாமை அகற்றவும் பாகிஸ்தானுக்கு இந்தியா நிச்சயம் உதவும் என்றும், இருவரும் இணைந்து பாகிஸ்தானிலுள்ள வறுமையையும் கல்லாமையும் மாற்றிக் காட்டுவோம் என்றும் உறுதி கூறியதாகக் கூறினார்
ஆனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தான் சொன்னபடி தற்போது நடந்து கொண்டு, பயங்கரவாதிகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோடி கூறியிருந்தார்
இதற்கு பின்னர் இரு தினங்களுக்கு முன்னர் இம்ரான்கான் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா தகுந்த ஆதாரங்களை வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தனக்கு அமைதியை ஏற்படுத்த மேலும் ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்
ஆனால் தற்போது இந்தியா பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. பாகிஸ்தானுக்கு பலமுறை ஆதாரங்களை அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மேலும் மேலும் ஆதாரங்களை மட்டுமே கொடுத்துக் கொண்டிருப்பது கால விரயத்தையும் பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கைத் தன்மையை நீர்த்துப் போகச் செய்வதற்கும் தான் காரணமாக அமையும் என்று கூறப்படுகிறது!