விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் இந்தியாவுக்கு திரும்பிய பின்னர் சனிக்கிழமை இன்று மருத்துவமனையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவரை சந்தித்து நலம் விசாரித்தார்
இந்திய விமானப் படை விமானி அபிநந்தன், தான் பாகிஸ்தானில் இருந்த 60 மணி நேரத்தில் நடந்தவற்றை நிர்மலா சீதாராமனிடம் விளக்கிக் கூறினார்
பாகிஸ்தானிலிருந்து அட்டாரி வாகா எல்லை வழியாக வெள்ளிக்கிழமை நேற்று இரவு அபிநந்தன் என்ற இந்திய விமானப்படை விமானி இந்தியாவுக்கு திரும்பினார். பின்னர் அவர் உடனடியாக தில்லியில் மருத்துவமனையில் அனுமதித்து, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
முன்னதாக இன்று காலை அபிநந்தனை அவரது குடும்பத்தினர் மற்றும் பல்வேறு மூத்த அதிகாரிகள் சந்தித்து பேசினர். இந்திய விமானப்படை அதிகாரிகள் அவருடன் இன்று காலை பேசிக்கொண்டிருந்தனர்
நேற்று இரவு 11 45 மணி அளவில் அவர் தில்லிக்கு திரும்பினார்! பின்னர் அவர் ஏர்போர்ஸ் சென்ட்ரல் மெடிக்கல் எஸ்டாப்ளிஷ்மெண்ட் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்
நிர்மலா சீதாராமன் நேற்று இரவு அபிநந்தனுக்கு தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பதிவில் தெரிவித்துக் கொண்டிருந்தார்! அதில் அவர் ஜெய்ஹிந்த்! விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான், உங்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம் ஒட்டுமொத்த நாடும் உங்களது வீரத்திற்கும் தியாகத்திற்கும் பாராட்டுகிறது ! கடினமான சூழ்நிலையிலும் நிதானம் இழக்காமல் பொறுமையாகவும் நிதானமாகவும் கையாண்ட விதம் இளைஞர்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக அமைந்தது வந்தேமாதரம் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருந்தார்
இதன் பின்னர் இன்று காலை ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் அபிநந்தனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்!
A day after Wing Commander Abhinandan Varthaman returned to India, Defence Minister Nirmala Sitharaman on Saturday met him at RR hospital in Delhi. The Indian Air Force pilot is understood to have explained Sitharaman the details about his nearly 60-hour stay in Pakistan