நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு 40 பேர் பலி ஆனதாக நியூசிலாந்து பிரதமர் அதிகாரபூர்வ அறிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கி சூட்டில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த நாள் நியூசிலாந்தின் கருப்பு நாள் என்றும் பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் ஈடுபட்டவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பயங்கரவாதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நபர் ஆஸ்திரேலியாவின் வலதுசாரி பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று ஆஸ்திரேலிய நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங் களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர், அந்நாட்டு கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க உத்தரவிட்டார்.