சிவகங்கை வேட்பாளராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்தது காங்கிரசுக்கு பலவீனம் தான் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுதர்சன நாச்சியப்பன் கூறியதாவது:-
சிவகங்கை வேட்பாளராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்தது காங்கிரசுக்கு பலவீனம் தான். என் வளர்ச்சியை தடுத்தவர் ப.சிதம்பரம்.
சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்துள்ளது மக்களுக்கே அதிர்ச்சி அளிக்கிறது.
தொகுதிக்கு எந்த நன்மையும் செய்யாமல் வெளிநாடுகளில் சொத்துகளை சேர்த்துள்ளது ப.சிதம்பரத்தின் குடும்பம்.
ப.சிதம்பரத்தின் குடும்பத்தை மக்கள் வெறுக்கிறார்கள்!
நான் சிதம்பரத்தை தேர்தலில் தோற்கடித்தேன் என்பதற்காக என் வளர்ச்சியை கெடுத்தவர் ப.சிதம்பரம்!
சிவகங்கை வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
!
- இவ்வாறு காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சுதர்சன நாச்சியப்பன் தன் உள்ளக் குமுறலைக் கொட்டித் தீர்த்திருக்கிறார்.