வீட்டில் இருந்த எல்லாவற்றையும் வேறு இடத்திற்கு மாற்றி விட்டு, வருமான வரித்துறையை ப.சிதம்பரம் அழைப்பதாக ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்.
வீட்டில் இருந்த எல்லாவற்றையும் வேறு இடத்திற்கு மாற்றி விட்டு, வருமான வரித்துறையை ப.சிதம்பரம் அழைப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்.
சென்னை மற்றும் சிவகங்கையில் உள்ள தனது வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தவுள்ள தகவல் தனக்கு தெரிய வந்துள்ளதாக ப.சிதம்பரம் கூறி இருந்தார்.
சோதனை நடத்த அதிகாரிகளை வரவேற்க தயாராக உள்ளதாகவும் அவர் ட்விட்டரில் தெரிவித்து இருந்தார்.
தனக்கும் வருமான வரித் துறை அதிகாரிகளுக்கும் ஏற்கனவே தொடர்பு இருப்பது போதும் தனக்கு ரகசிய தகவல்களை முன்னதாகவே வருமான வரித்துறை தெரிவிப்பது போதும் அவரது கருத்து இருந்தது இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் இப்படி கிண்டல் செய்துள்ளார்