கருத்துக் கணிப்புகள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளன. முதல் கட்ட தேர்தல் வரும் 11ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், 48 மணி நேரத்துக்கு முன்னர் கருத்துக் கணிப்புகள் வெளியிடக் கூடாது என்பதால், இனி கருத்துக் கணிப்புகளோ, கருத்துத் திணிப்புகளோ வெளியாக வாய்ப்பில்லை.
இதுவரை நடத்தப்பட்ட ஒட்டுமொத்த கருத்து கணிப்புக்களின் படி மத்தியில் ஆளும் பாஜக., கூட்டணியே மீண்டும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தேசிய பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, வேளாண் பொருட்களின் விலைகள் ஆகியவற்றின் மீதான பாஜக., தரும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என 4 கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. இதனால் மொத்தமுள்ள 543 இடங்களில், ஆட்சி அமைக்க தேவையான 273 க்கும் அதிகமான இடங்களை பா.ஜ., கூட்டணி கைப்பற்றும் என்று கூறப்படுகிறது!
கடந்த 4 நாட்களில் வெளியிடப்பட்ட பெரும்பாலான கருத்துக் கணிப்புக்களில், புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் பயங்கரவாத முகாம் மீது மோடி அரசு நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் அக்கட்சிக்கு அதிக செல்வாக்கை பெற்றுத் தந்துள்ளது. அதே நேரம் மக்களின் நாடித்துடிப்பை சரியாக கணிக்காத காங்கிரஸ், காஷ்மீரில் ராணுவம் திரும்பப் படும், அதிகாரம் குறைக்கப் படும் என்றெல்லாம் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தவை அக்கட்சிக்கு பாதகமாக திரும்பியுள்ளன.
கருத்து கணிப்புக்கள் விவரம் :
சி வோட்டர் :பா.ஜ., கூட்டணி – 267 காங்., கூட்டணி – 142மற்ற கட்சிகள் – 134
இந்தியா டிவி – சிஎன்எக்ஸ் :பா.ஜ., கூட்டணி – 275காங்., கூட்டணி – 147மற்ற கட்சிகள் – 121
சிஎஸ்டிஎஸ் – லோக்நிதி : பா.ஜ., கூட்டணி – 263- 283 (273) காங்., கூட்டணி – 115 – 135 (125) மற்ற கட்சிகள் – 130-160 (145)
டைம்ஸ் நவ் – விஎம்ஆர் :பா.ஜ., கூட்டணி – 279காங்., கூட்டணி – 149 மற்ற கட்சிகள் – 115
கருத்து கணிப்புக்களின்படி…
பா.ஜ., கூட்டணி – 273
காங்., கூட்டணி – 141
மற்ற கட்சிகள் – 129